நண்பனுக்கு கல்வெட்டு எழுதியது - மதம் என்பது குலக்கல்வி!

மதம் என்பது குலக்கல்வி!

நண்பன்,
புனிதப்புத்தகங்கள் சிறந்தது.

நான் பின்பற்றும் இறைக்கோட்பாடு சிறந்தது என்று சொல்கிறீர்கள்.

புத்தகத்தை படித்தால் எனக்கு பித்தம் தெளியும் என்று நினக்கிறீர்கள். :-))

**
உங்களுக்கு கல்விக்கும் குலக்கல்விக்கும் வித்தியாசம் தெரியும். சரியா ?

1 ஆம் வகுப்பில் இருந்து 10 ஆம் வகுப்பு வரை கல்வி கற்று கொடுக்கப்படுகிறது.

மொழி,கணிதம்,சரித்திரம்,பூகோளம்.... இன்னபிற ( Spiral learning )கற்றுத்தரப்படுகிறது.

11 ஆம் வகுப்பில் மாணவன் இதுவரை தான் அறிந்தவற்றில் (கற்பிக்கப்பட்ட) இருந்து தனக்கான சில குறிப்பிட்ட பாடங்களை மட்டும் தெரிவு செய்து அதில் மேலும் அறிய முயலுகிறான்.

கல்லூரியில் அவனது பாடங்களின் தேர்வு ஒரு புள்ளியை அடைகிறது.

இந்த முறையில் அவனுக்கு தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு வாழங்கப்படுகிறது.

மதம் ...

ஒரு குழந்தை பிறந்தவுடன் அதற்கான மத உரிமை பறிக்கப்பட்டு பெற்றோரின் மதம் என்ற சட்டை மாட்டப்படுகிறது.

(உங்களுக்கான கேள்வி 8)
உங்கள் குழந்தகளுக்கு அவர்களுக்கான மதத்தை தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தை குழந்தைப் பருவத்தில் இருந்து வழங்கி உள்ளீர்களா?


(உங்களுக்கான கேள்வி 9)
நீங்கள் பின்பற்றும் புனித புத்தகத்தை குலக்கல்வியாக அவர்களுக்கு கொடுக்கிறீர்களா?


இரசனை,பரந்தவெளி என்று பேசும் நீங்கள், மதம்மும் புனித புத்தகங்களும் நல்லவை என்று நம்பும் நீங்கள்... அதுதான் வழிகாட்டி என்று நம்பும் நீங்கள்...

(உங்களுக்கான கேள்வி 10)

உங்கள் குழந்தைகளுக்கு மதத்தை குலக்கல்வியாக இல்லாமல் அனைத்து மதங்களையும் படித்து அறியும் வாய்ப்பை குழந்தைப் பருவத்தில் இருந்தே கொடுக்க முடியுமா?



(உங்களுக்கான கேள்வி 11)
அவர்களை இஸ்லாம் சாயல் இல்லாமல வெறும் குழந்தைகளாக வளர்த்து, பதின்ம வயதில் வர்கள் விரும்பினால் மட்டும் , அதுவும் புனித புத்தகத்தில் தேர்ச்சி பெற்றால் மட்டும் அவர்களாக எந்த மதத்திலும் சேர்ந்து வளரும் வாய்ப்பை கொடுக்க முடியுமா?

அவர்கள் வளர்ந்த பிறகு எதுவாகவும் மாறட்டும் என்று சொல்ல வேண்டாம்.

பரந்த வெளிகளில் இயங்கும் நீங்கள் , தெளிவாக இதை ஏன் உங்கள் குழந்தைகளிடம் இப்போதே சொல்லி அவர்களின் குழந்தைப்பருவ மத அடையாளங்களை கிழித்து எறிந்து, பிற்காலத்தில் அவர்களாகவே தேர்ந்தெடுக்கும் அவர்களின் உரிமையை இப்போதே அவர்களுக்கு உணர்த்தக்கூடாது?

****

சேர்ந்து வாழும் சமூகப்பரப்பில் , குடும்ப சூழ்நிலையில் நான் சொன்னவை எல்லாம் செய்ய முடியாது. சிலவற்றை முயற்சிக்கலாம். அதுதான் உண்மை.

ஆனால், இப்படி குழந்தைகளுக்கு மதம் என்ற குலக்கல்வி கொடுத்து அவர்களை கெடுக்கிறோம், அவர்களின் எதிர்கால உரிமையில் கருத்து திணிப்பு செய்கிறோம் என்ற குற்ற உணர்ச்சியாவது உங்களிடம் உள்ளதா?

அதுவும் இல்லை என்றால்....

எனது பார்வையில் நீங்கள் மதவாதி. :-))

ஆனால் அது உங்களுக்கு புரியா வண்ணம் உங்கள் மூளை செரிவு செய்யப்படுள்ளது.

--
http://nanbanshaji.blogspot.com/2008/11/trial-by-bloggers.html?showComment=1229388420000

0 கருத்துகள்: